ரோட்டோரம் உறங்கிய பலூன் விற்கும் பெண்..! பாட்டிலால் தாக்கி திருட முயன்ற நபர் - வெளியான காட்சி

Update: 2023-04-29 13:40 GMT

கோவையில் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த பலூன் விற்கும் பெண்ணிடம் பணம் திருட முயன்று தப்பிச் சென்றவரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். ராஜாஸ்தானை சேர்ந்த மனோஜும், ரேகாவும் கோவையில் பலூன் வியாபாரம் செய்து வருகின்றனர். வீடு இல்லாத இவர்கள், வடகோவை மேம்பாலம் அருகே படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது, மதுபாட்டிலுடன் வந்த ஒருவர், அந்த பெண்ணிடம் பணம் திருய முயன்று, அவர் விழித்துக் கொண்டதும் பாட்டிலால் தாக்கி விட்டு தப்பிச் சென்றார். அருகில் இருந்தவர்கள் அந்த நபரை விரட்டிச் சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர் திருட முயன்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்