தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசம் - 2 இளைஞர்களை கைது செய்த மதுரை காவல்துறை
மதுரை பாண்டிகோவில் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் செய்த இளைஞர்களில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. தலைக்கவசம் அணியாமல், மிக அதிவேகமாக, கவனக்குறைவாக சாலையில் செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் செயல்பட்டனர்