மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா..மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் நிகழ்வு - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Update: 2023-05-07 01:38 GMT

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரை சித்திரை திருவிழா கடந்த 23-ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று அதிகாலை பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளினார். இன்று காலை கள்ளழகருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு பின் சைத்திர உபசாரம் நடந்தது. பின்னர், கருட வாகனத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப்பெருமாள் நாரைக்கு முக்தி அளிக்கும் வகையில் அங்கு கட்டப்பட்டிருந்த நாரை பறக்கவிடப்பட்டது. மண்டூக முனிவரின் உருவச்சிலைக்கு நம்மாழ்வார் திருமொழி பாடப்பட்டு சாப விமோசனம் வழங்கும் பூஜை நடத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்