திருமணத்திற்கு முன் இருந்த காதல்.. தங்கச்சி கணவருக்கு மச்சானால் நேர்ந்த சோகம்

Update: 2023-05-21 12:20 GMT

சென்னை அயனாவரத்தில், முன்விரோதம் காரணமாக இளைஞரை கத்தியால் தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அயனாவரம் வசந்த கார்டன் பகுதியில் வசிக்கும் பிரசாந்த் என்பவர், திருமணத்துக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்ததால், அந்தப் பெண்ணின் சகோதரர் தீபன் மற்றும் நண்பர்களுடன் தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில், பிரசாந்த் சாலையில் நடந்து சென்றபோது, அங்கு வந்த தீபனின் நண்பர்கள் 4 பேர் கத்தியால் தாக்கினர். இதில் காயமடைந்த பிரசாந்த், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பிரசாந்த் அளித்த புகாரின்பேரில், நவீன் ராஜ், சுரேந்திரன், சுகுமார், திலீப்குமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்