"நிலப் பிரச்சினை" -பக்கத்து வீட்டுக்காரரை இளைஞர் அரிவாளால் பயங்கரமாக தாக்கும் காட்சிகள்

Update: 2022-09-15 10:04 GMT

"நிலப் பிரச்சினை" -பக்கத்து வீட்டுக்காரரை இளைஞர் அரிவாளால் பயங்கரமாக தாக்கும் காட்சிகள்

திருச்சி மாநகரம் கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த அரியமங்கலம் போக்குவரத்து காவல்துறையில் தலைமைக் காவலராக பணிபுரியும் சுஜாதா என்பவருக்கும் இடையே பாதைத் தொடர்பான பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, பாதையை அளப்பதற்காக நில அளவையர் வந்துள்ளார்.

அப்போது, சுஜாதா மற்றும் அவரது உறவினர்கள், 10 பேர் ஒன்று சேர்ந்து, பாதையை அளக்கக் கூடாது என பிரச்சனை செய்துள்ளனர்.

இதனிடையே, தனது வீட்டின் கார்த்திக்கை, சுஜாதாவின் உறவினரான பார்த்திபன் என்ற இளைஞர், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தலையில் சரமாரியாக வெட்டினார்.

தடுக்க வந்த கார்த்திக்கின் தங்கை ரூபா, அவரது கணவரான ரவிக்குமார் ஆகியோரும் அரிவாளால் தாக்கப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்