கோலாலம்பூர் நிலச்சரிவு விபத்து : பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு - 9 பேர் மாயம்..!

Update: 2022-12-18 05:15 GMT

மலேசியாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள படாங் காலி என்ற நகரில் இரண்டு நாட்களுக்கு முன்பு கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால், அங்கிருந்த வீடுகள் மண்ணில் புதைந்த‌தால் பலர் உயிரிழந்தனர்.

தற்போது வரை 24 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் 9 பேர் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்