அரண்மனையில் நடந்த நிகழ்ச்சி- குமரி ஆட்சியருக்கு அனுமதி மறுத்த கேரளா போலீஸ்..?

Update: 2022-09-23 10:18 GMT

பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த கன்னியாகுமரி ஆட்சியர் அரவிந்தை அரண்மனை நுழைவாயிலில் அனுமதிக்க மறுத்து கேரள போலீசார் கதவை அடைத்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

உடைவாள் நிகழ்ச்சியின் போது தமிழக மற்றும் கேரள அமைச்சர்களுடன் ஆட்சியர் அரவிந்தும் பங்கேற்க வந்திருந்தார்.

ஆனால் அவருக்கு அனுமதி மறுத்து கேரள போலீசார் அரண்மனை கதவை அடைத்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தமிழக போலீசாரின் அறிவுரைக்கு பின்னர் அரண்மனை கதவு திறக்கப்பட்டு ஆட்சியர் அரவிந்த் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது...

Tags:    

மேலும் செய்திகள்