திருமண நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்த‌தால் பிரச்சனை... கைகலப்பாகி அடிதடியில் முடிந்த‌தால் மணமக்கள் அதிர்ச்சி

Update: 2023-01-31 13:05 GMT

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே திருமண நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட பிரச்சினை அடிதடியில் முடிந்தது. மேப்பயூர் பகுதியில், ஆரவாரத்தோடு நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு இடையே, மணமகனின் நண்பர்கள் சிலர் விதவிதமான பட்டாசுகளை வெடித்துள்ளனர். இது, மணமகள் தரப்பினருக்கு இடையூறாக மாறியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட வாய் தகராறு உச்சகட்டத்தை அடைந்து, அடிதடியாக மாறியது. வாழ்த்துவார்கள் என அழைக்கப்பட்டவர்கள் கும்பலாக மோதிக்கொண்டது, மணமக்களை அதிர்ச்சி அடைய வைத்த‌து.

Tags:    

மேலும் செய்திகள்