தோழியை நண்பர்களுக்கு இரையாக்கிய பெண் - ஓடும் காரில் நடந்த கொடூரம் - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2022-11-20 04:00 GMT

கேரள மாநிலம் கொச்சியில், இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்களையும், உடந்தையாக இருந்த தோழியையும் போலீசார் கைது செய்தனர். கொச்சியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தமது தோழியுடன், அங்குள்ள மதுபான விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு மது அருந்திய நிலையில், போதை அதிகமானதால், இளம்பெண் மயங்கியுள்ளார். அங்கு வந்த இளைஞர்கள் 3 பேர், இளம்பெண்ணை, அவரது வீட்டில் விடுவதாக கூறி காரில் ஏற்றியுள்ளனர். பின்னர், காரில் வலம் வந்தபடியே, அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்ததும், அந்த பெண்ணை, அவர் வசித்த பகுதியில் விட்டுவிட்டு, தப்பிச் சென்றனர். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். விசாரணை மேற்கொண்ட போலீசார், களமசேரி பகுதியைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். மேலும், அந்த பெண்ணுடன் மதுபான விடுதிக்குச் சென்ற தோழிக்கும் இதற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. அவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்