அமைச்சர் சாமிநாதன் தலைமையில் பத்திரிகையாளர் நல வாரிய கூட்டம் - ஓய்வூதியம், குடும்ப உதவி நிதி- பரிசீலனை
சென்னை தலைமை செயலகத்தில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற பத்திரிகையாளர் நல வாரியத்தின் 4வது கூட்டத்தில் பத்திரிகையாளர் ஓய்வூதியம், குடும்ப உதவி நிதி கோரிய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. இக்கூட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மோகன், பத்திரிகையாளர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினரான தினத்தந்தி குழும இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பணிக்காலத்தில் மரணமடைந்த பத்திரிகையாளர் ஒருவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்