கரும்பு போதுமா..? தேங்காயும் சேர்த்து கொடுங்கப்பா... பாஜக விவசாய அணி சார்பில் போராட்டம்

Update: 2023-01-05 13:36 GMT

பொங்கல் தொகுப்புடன் தேங்காய் வழங்கக் கோரி கடலூர் நகரில் பாஜக விவசாய அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

தலைமை தபால் நிலையம் அருகே திரண்ட பாஜகவினர், கைகளில் தேங்காய் ஏந்தியபடி தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

பின்னர், அங்கிருந்த மக்களுக்கு இலவசமாக தேங்காய் விநியோகம் செய்தனர்.

போராட்டத்தின் இறுதியில் தங்களது கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பாஜகவினர் மனு வழங்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்