பாம்பு கடித்து பலியான சம்பவம் சாலை வசதி இல்லாததுதான் காரணமா? வேலூர் ஆட்சியர் குடுத்த விளக்கம்

Update: 2023-07-21 05:59 GMT

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே, பாம்பு கடித்து உயிரிழந்தவரின் உடல் உடற்கூராய்வுக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவசர காலத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வர ஆம்புலன்ஸ் வசதியும், இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் சென்று வரும் வகையில் மண் சாலை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளாமல் இருந்துவிட்டதாகவும், சாலை வசதி இல்லாததால் சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியவில்லை என்ற செய்தி தவறானது என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்