இன்ஸ்பெக்டர் மகனிடமே கைவரிசை - கும்பலோடு தூக்கிய போலீசார்
பல்லடம் அருகே காவல்துறை ஆய்வாளர் மகனிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றும் பூபாலன் என்பவரை தாக்கிய கும்பல் 13 ஆயிரம் ரூபாய் பணம், நகைகளை பறித்து சென்றனர்.
இதையடுத்து குற்றவாளிகளை போலீசார் தேடிவந்த நிலையில், மாதப்பூர் பகுதியில் பதுங்கி இருந்த மூன்று பேரையும் கைது செய்தனர்.