கபடி விளையாடிய போது திடீரென சரிந்த பள்ளி மாணவி - மைதானத்திலேயே உயிர் பிரிந்த சோகம்

Update: 2023-02-11 02:41 GMT

ஓசூர் அருகே கபடி விளையாடி கொண்டிருந்த போது 15 வயது பள்ளி மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளன.

இதில், கலந்து கொண்ட 15 வயது மாணவி சங்கீதா, கபடி விளையாடிக் கொண்டிருந்த போது தீடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மருத்துவமனை கொண்ட செல்லப்பட்ட மாணவியின் உடல் அங்கிருந்து அவரின் சொந்த ஊரான தாரவாடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்