முதல்முறையாக மலைவாழ் பழங்குடியின பெண் கிராம உதவியாளராக தேர்வு

Update: 2023-01-13 02:03 GMT

முதல்முறையாக மலைவாழ் பழங்குடியினமான காணி சமுதாயத்தை சேர்ந்த பெண் ஒருவர், கிராம நிர்வாக உதிவியாளராக தேர்வாகியுள்ளார்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள அகஸ்தியர் காணி குடியிருப்பை சேர்ந்தவர் அகிலா.

இவர் உள்பட அப்பகுதியை சேர்ந்த 3 பேர் கடந்த மாதம் நடைபெற்ற கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பித்த நிலையில், அகிலா எழுத்து மற்றும் நேர்முக தேர்வில் தேர்ச்சிபெற்றார்.

இந்நிலையில், அவருக்கு சேரன்மகாதேவி சப் கலெக்டர் முகமது சபீர் ஆலம், பணி நியமன ஆணையை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்