கறிக்குழம்பை சாப்பிட்டதால் அப்பாவை முதுகில் வெட்டிய சாப்பாட்டு வெறியன் - கும்பகோணத்தில் பயங்கரம்

Update: 2023-05-13 01:53 GMT

கும்பகோணம் அருகே கதிர் அறுக்கும் அரிவாளால் தந்தையை வெட்டிய மகனை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் விசலூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவருக்கு ராமச்சந்திரன் என்ற மகன் இருக்கும் நிலையில், இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனிடையே ராமச்சந்திரனுக்கான அசைவ உணவை, அவரது தந்தை சாப்பிட்டு விட்டதால் ஆத்திரமடைந்த அவர், கதிர் அறுக்கும் அரிவாளால் தந்தையின் முதுகில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த மோகன்தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்