ஊரைவிட்டு மொத்தமாக வெளியேறும் மீனவர்கள்...- திருவள்ளூரில் பரபரப்பு

Update: 2022-11-30 10:52 GMT

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவிப்பதை கண்டித்து, கூனங்குப்பம் மீனவர்கள் ஊரைவிட்டு வெளியேறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பழவேற்காடு ஏரியில் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் நிலையில், கூனங்குப்பம் மீனவர்கள் மீன்பிடித்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என, கோட்டைக்குப்பம், ஆண்டிக்குப்பம் உள்ளிட்ட கிராம மக்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, பழவேற்காடு ஏரியில் கூனங்குப்பம் மீனவர்கள் மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கூனங்குப்பம் மீனவர்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதை கண்டித்த கூனங்குப்பம் மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர், மீன்பிடி வலைகளுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு பேரணியாக செல்கின்றனர். மீன்பிடி பிரச்னை தொடர்பாக, மீனவர்கள் ஊரைவிட்டு வெளியேறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பரபரப்பு நிலவுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்