ஹெல்மெட் இல்லாமல் கார் ஓட்டியதால் அபராதம்.. "ஒரு வாரமா காரே எடுக்கல..எப்படி சார்..?"ஷாக்கான ஓனர்..

Update: 2023-05-29 07:43 GMT

பள்ளிபாளையம் அருகே, ஹெல்மெட் அணியாமல் கார் ஓட்டியதாக அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எலந்தக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். மெக்கானிக் தொழில் செய்துவரும் இவர், சொந்தமாக கார் வைத்துள்ளார். இந்த நிலையில், தனது செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை கண்ட இவர், அதிர்ச்சி அடைந்துள்ளார். அதில், தலைக்கவசம் அணியாமல் காரை இயக்கியதற்காக ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனிடையே, காரை ஒரு வாரமாக இயக்காத நிலையில், அபராதம் எவ்வாறு விதிக்கப்பட்டது என வெற்றிவேல் குழப்பம் அடைந்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்