ஒரே இடத்தில் வட்டமிட்ட கழுகுகள்... வாகன ஓட்டிகள் அச்சம்

Update: 2023-05-14 13:00 GMT

ராமேஸ்வரம் அருகே ஒரே இடத்தில் வட்டமிட்ட 50க்கும் மேற்பட்ட கழுகுகள் வட்டமடித்த‌தால் வாகனங்களில் அடிபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.மெயம்புளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் கோழி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. அவற்றை உண்ணுவதற்காக, ஏராளமான கழுகுகள் குவிந்துள்ளன. இதனால், வாகனங்களில் அடிப்பட்டு உயிரிழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கழுகுகள் அடிபடும் முன்பே, கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்