கூரியர் சர்வீஸில் புதிய போதை.. மும்பை To ராணிப்பேட்டை டோர் டெலிவரி..- அச்சுறுத்தும் அடுத்த ஆபத்து!

Update: 2023-05-15 02:19 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் அக்ராவரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து, காரை பகுதியை சேர்ந்த பிரதீப் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கைதான நபர் அளித்த தகவலின் பேரில், பூஷன பிரியன், ராஜ்குமார், சரவணன் என 4 பேரை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான கும்பலிடம் நடத்திய விசாரணையில், மும்பையிலிருந்து போதை மாத்திரைகளை கூரியர் சர்வீஸ் மூலம் வரவழைத்து, அதனை கல்லூரி மாணவர்களுக்கு விற்று வந்தது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்