திருவண்ணாமலை மீது பறந்த ட்ரோன் - ரஷ்ய இளைஞரிடம் அதிரடி விசாரணை

Update: 2023-01-05 02:10 GMT

திருவண்ணாமலை மலையின் மீது ட்ரோன் கேமரா பறக்க விட்ட ரஷ்ய இளைஞரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் அமைந்துள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலைக்கு, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மலையின் மீது ரஷ்ய இளைஞர் ஒருவர் ட்ரோன் கேமராவை அனுமதி இன்றி பறக்கவிட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், ரஷ்ய இளைஞரிடம் இருந்து ட்ரோன் கேமராவை பறிமுதல் செய்து, அவரை வனத்துறை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்