பிரதமர் வீட்டின் மேல் ட்ரோன்.. பதற்றத்தில் தலைநகரம்

Update: 2023-07-03 12:26 GMT

டெல்லியில், பிரதமர் மோடி இல்லம் அமைந்துள்ள பகுதியில் ட்ரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம் டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு, இன்று அதிகாலை 5 மணியளவில், ட்ரோன் பறந்ததாக, பிரதமர் மோடியின் பாதுகாப்பு படை பிரிவான எஸ்.பி.ஜி. சார்பில், டெல்லி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் இல்லம் அமைந்துள்ள பகுதிகள் No-Fly Zone பகுதியில் வருவதால், இதுபோன்ற ட்ரோன்கள் மற்றும் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் இல்லத்தின் மீது ட்ரோன் பறந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்