தெற்கு ரயில்வேக்கு திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை | southern railway

Update: 2023-07-01 05:42 GMT

தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா தேவாலயத்தில், ஆகஸ்ட் ஐந்தாம் தேதி பொன் தேர் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 3 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கூடுதல் ரயில்கள் ஏற்பாடு செய்யுமாறு, தென்னக ரயில்வேக்கு திமுக எம்.பி.கனிமொழி கடிதம் எழுதியுள்ளார். அந்த நாட்களுக்கான முன்பதிவு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முடிந்து விட்டதாகவும், பக்தர்களின் வசதிக்காக சென்னை முதல் தூத்துக்குடிக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்