'ரசம்' கேட்டு வாங்கி சாப்பிட்டு பார்த்த டிஜிபி சைலேந்திர பாபு... தேவர் குருபூஜை - நேரில் ஆய்வு

Update: 2022-10-29 02:56 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழாவுக்கு பாதுகாப்பு அளிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் வந்து தங்கியுள்ளனர். இந்நிலையில், அங்கு வந்த டிஜிபி சைலேந்திரபாபு, போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், காவலர்களுக்கு சமைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டுப் பார்த்தார். மேலும் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களுக்குச் சென்று அவர்களுக்கு போதிய வசதிகள் இருக்கிறதா என்றும் கேட்டறிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்