நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்புகள்..கதிகலங்க வைக்கும் பலி எண்ணிக்கை - துருக்கி நிலநடுக்கம்

Update: 2023-02-18 16:59 GMT

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45ஆயிரத்தைக் கடந்துள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். நிலநடுக்கம் நிகழ்ந்து 12 நாட்கள் கடந்த நிலையிலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகின்றன. மேலும் பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர்... துருக்கியில் மட்டும் 39 ஆயிரத்து 672 பேர் பலியாகியுள்ள நிலையில், ஏற்கனவே உள்நாட்டுப் போரால் சிதைந்து கிடக்கும் சிரியாவில் நிலநடுக்க பலி எண்ணிக்கை 5 ஆயிரத்து 800ஐக் கடந்துள்ளது. மீட்புப் பணிகளுக்கு உதவ உலக நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்