பாஜக வேட்பாளராக களமிறங்கும் குஜராத் கலவர குற்றவாளியின் மகள்

Update: 2022-11-14 06:57 GMT

குஜராத் கலவரத்தின் போது குற்றவாளி என நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபரின் மகளை, ஆளும் பாஜக குஜராத் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளாராக களமிறக்கியுள்ளது.

குஜராத் கலவரத்தின் போது 97 பேரை படுகொலை செய்த குற்றத்திற்காக 32 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி மனோஜ் குல்கர்னி என்பவரின் மகள் பாயல் குல்கர்னி, தற்போது பாஜக சார்பில் குஜராத் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மகளுக்கு பிரசாரம் செய்வதற்காக தற்காலிக பரோலில் வெளிவந்த மனோஜ் குல்கர்னிக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்