சொந்த வேலைக்கு அழைத்து சென்று மாணவன் உயிரை பறித்த ஆசிரியரின் அலட்சியம் - நடுரோட்டில் கதறிய தாய்

Update: 2022-11-23 06:22 GMT

கடலூர்: பண்ருட்டி அருகே ஒறையூர் கிராமத்தில் தேங்காய் பறிக்க சென்ற ஐடிஐ மாணவர் அரசு (17) மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்தில் அதற்கு காரணமான ஆசிரியர் பிரபாகரனை புதுப்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவரின் உறவினர்கள் பண்ருட்டியில் உள்ள தனியார் ஐடிஐ பயிற்சி நிறுவனம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பண்ருட்டி அருகே ஆசிரியர் தோட்டத்தில் தேங்காய் பறிக்கச் சென்ற ஐடிஐ மாணவன், மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம்....

விபத்துக்கு காரணமான ஆசிரியரை கைது செய்து போலீசார் விசாரணை....

Tags:    

மேலும் செய்திகள்