சாமியே சரணம் ஐயப்பா!... அதிகாலை முதலே அலைமோதிய கூட்டம் - சபரிமலையில் குவிந்த பக்தர்கள்

Update: 2022-11-20 01:58 GMT

சபரிமலை ஐயப்பன் கோயிலில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில், மண்டல பூஜைக்காக, கடந்த புதன் கிழமை நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால், அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்று வரை 1 லட்சத்து 28 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதால், இன்று மட்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால், நாளையும் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்