Rameswaram | தேங்கிய நீர்.. நடக்க முடியாமல் பேக்கை தலையில் தூக்கி சென்ற பிஞ்சுகள் - அதிர்ச்சி வீடியோ
ராமேஸ்வரம் அருகே சாலையில் குளம் போல தேங்கிய மழை நீரில்
பள்ளி மாணவர்கள் தலையில் புத்தகப் பையை சுமந்துச் சென்றனர்.
டிட்வா புயலால் 20 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால், காட்டுபிள்ளையார் கோயில் அருகே குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் தினந்தோறும் அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். புத்தக பை மழைநீரில் விழாமல் இருக்க பாதுகாக்கும் பிஞ்சுகளின் நிலை கவலை அடையச்செய்துள்ளது.