"திமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்" - "ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளேன்" - சி.டி.ஆர்.நிர்மல் குமார்

Update: 2022-11-03 03:15 GMT

"திமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்" - " ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளேன்" - சி.டி.ஆர்.நிர்மல் குமார் (பாஜக ஐடி விங் தலைவர்)

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை தள்ளி போனதற்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் என ட்விட்டர் பதிவிட்டதாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணைக்கு ஆஜரான பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவின் வேகத்தை திமுக அரசு தொடரும் வழக்குகளால் குறைக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும், தி.மு.க அமைச்சர்கள் செய்த ஊழல் தொடர்பான முழு ஆதாரங்களை சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையினரிடம் அளித்துள்ளதாகவும் சி.டி.ஆர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்