பஸ்ஸில் ஃபுட்போர்ட் அடிப்பதில் தகராறு...! - சரமாரியாக மோதிக்கொண்ட இருகிராம மாணவர்கள் ...

Update: 2022-11-26 11:49 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற தனியார் பேருந்தில், இரு கிராம மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

2 பள்ளி மாணவர்களை பிற பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் பேருந்தில் தாக்கியதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த போலீசார் ரகளையில் ஈடுபட்டோரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது படிக்கட்டில் தொங்கியது தொடர்பாக, ஏற்கனவே இருதரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து வீடியோ காட்சிகளின் அடிப்படையில் பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்