படிப்பதற்காக அழைத்து சென்று 12வயது சிறுமியை கர்பமாக்கிய 11ம் வகுப்பு மாணவன் - அதிரிச்சியில் உறைந்த சிறுமியின் தாய்

Update: 2023-02-08 09:51 GMT

பெரம்பூரில் 12 வயது சிறுமியை 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கர்ப்பமாக்கியதாக கூறி சிறுமியின் தாய் போலீசில் புகாரளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பூரை சேர்ந்த 12 வயது சிறுமியின் தாய் ஒருவர் போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், தனது மகளின் உடல்நலத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் மருத்துவமனை அழைத்து சென்றதாகவும், தனது மகள் 3 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது என தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிறுமியிடம் நடத்திய விசாரணையில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த 11 ஆம் வகுப்பு மாணவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அந்த மாணவன் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகாரளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்