"ஆளுநர் போட்ட உத்தரவை இல்லாமல் செய்துவிட்டார் முதல்வர்" - திருச்சி சிவா பேச்சு

Update: 2023-06-28 05:56 GMT

பட்டமளிப்பு விழாவுக்கு கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என்ற ஆளுநரின் உத்தரவை, முதல்வர் ஸ்டாலின் இல்லாமல் செய்துவிட்டதாக எம்.பி.திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் பொது வாழ்வை கவுரவிக்கும் நிகழ்ச்சி, சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தி.மு.க மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என ஆளுநர் உளறியிருப்பதாக விமர்சித்தார். அதனைத்தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கூறியதாகவும், ஆனால் அந்த உத்தரவை முதல்வர் ஸ்டாலின் இல்லாமல் செய்துவிட்டதாகவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்