வளர்ப்பு பூனையை தூக்கிச் சென்ற சிறுத்தைகள்...Viral Video

Update: 2023-01-10 05:01 GMT

வளர்ப்பு பூனையை தூக்கிச் சென்ற சிறுத்தைகள்...Viral வீடியோ


உதகை அருகே குடியிருப்பு பகுதியில் இருந்த வளர்ப்பு பிராணியை, சிறுத்தைகள் தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 சிறுத்தைகள் குடியிருப்பு பகுதியில் உலா வந்துள்ளது. அப்போது குடியிருப்பு பகுதியில் இருந்த வளர்ப்பு பிராணியான பூனையை, சிறுத்தை லாவகமாக தூக்கி சென்றுள்ளது. இதை வாகன ஓட்டி ஒருவர் செல்போனில் பதிவு செய்த நிலையில், அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்