நள்ளிரவில் பெண்களிடம் செயின் பறிக்கும் கும்பல் - அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியீடு

Update: 2022-06-24 20:27 GMT

பெங்களூரு நகரில் கடந்த ஒரு வாரத்தில் 4 வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறியது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜாலஹள்ளி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், அங்கு நடந்து சென்றவரை வழிமறித்து, தங்க சங்கிலி மற்றும் பணத்தை பறித்து சென்றனர். இதேபோல் பீன்யா பகுதியிலும் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்து, தங்க சங்கிலியை பறித்து சென்றனர். கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ள நிலையில், இந்த 4 சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல் என தெரியவந்துள்ளது. இந்நிலையில், போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்