சாலையில் தேங்கிய மழைநீரால் கார் கவிழ்ந்து கோர விபத்து..உடல்நசுங்கி பலியான இருவர்

Update: 2023-07-06 03:32 GMT

நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியை சேர்ந்த பெண்ணுக்கும், நாங்குநேரி முதலைகுளத்தை சேர்ந்த ஒருவருக்கும், பெண்ணின் வீட்டில் திருமணம் நடந்துள்ளது. புதுமண தம்பதிகளை மாப்பிள்ளை வீட்டிற்கு உறவினர்கள், இரண்டு வாகனங்களில் அழைத்துச் சென்று விட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து ராமையன்பட்டி திரும்பும் வழியில், பொன்னாக்குடி அருகே நான்கு வழிச்சாலையில், தேங்கியிருந்த மழைநீரால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் சாமித்துரை, பிரவீன் ஆகிய இருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 6 பேரை, பின்னால் மற்றொரு வாகனத்தில் வந்த உறவினர்கள், மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்