பேருந்தில் பற்றவைத்த புஸ்வானம்.! மல மலவென தீ பரவியதால் பரபரப்பு.. தண்ணீர் ஊற்றி அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு

பேருந்தில் பற்றவைத்த புஸ்வானம்.! மல மலவென தீ பரவியதால் பரபரப்பு.. தண்ணீர் ஊற்றி அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு

Update: 2022-07-03 14:55 GMT

பேருந்தில் புஸ்வானம் கொளுத்தி கொண்டாட்டம்

திடீரென பேருந்தில் தீ பற்றியதால் பரபரப்பு

தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு

கேரளாவில் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா செல்வதற்கு முன் பேருந்தின் மேற்பகுதியில் புஸ்வானம் கொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது, திடீரென பேருந்தில் தீ பற்றியதால் பரபரப்பு நிலவியது. கொல்லத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். முன்னதாக, பேருந்து புறப்படும் முன் அதன் மேல்பகுதியில் புஸ்வானத்தை கொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, திடீரென பேருந்தில் தீ பற்றியது. உடனே, தண்ணீர் ஊற்றி தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்