பவுண்டரி லைன் முழுதும் பீர் பாட்டில் - இளைஞர்களின் வினோத செயல் - அதிர்ச்சியில் ஊர் மக்கள்

Update: 2023-06-05 03:48 GMT

கடலூரில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள், எல்லைக்கோட்டில் வரிசையாக மது பாட்டில்களை அடுக்கி வைத்திருந்த சம்பவம் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடலூர் மஞ்சைநகர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தை குடிகார‌ர்கள், மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள், அந்த மது பாட்டில்களை சேகரித்து எல்லை கோட்டின் அடையாளமாக பயன்படுத்தியுள்ளனர். இதனிடையே, விளையாட்டு மைதானத்தில் சட்ட விரோதமாக மது அருந்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்