அண்ணாமலை கைதை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் - கடலூரில் பரபரப்பு

Update: 2022-11-02 03:54 GMT

அண்ணாமலை கைதை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் - கடலூரில் பரபரப்பு

கடலூர் மாவட்டத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை திமுகவினர் தாக்குதல் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், ஆளும் திமுக அரசை கண்டித்தும் வடலூரில் பாஜகவினர் இரவு 8 மணிக்கு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றபோது, நூற்றுக்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள், அந்த வாகனத்தை தாக்க முற்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, பாஜகவினரை பத்திரமாக தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் இரு தரப்பையும் போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்