“சண்டையை தடுத்தது ஒரு குத்தமா? நல்லதுக்கு காலமே இல்ல..“ - வெளியான சிசிடிவி காட்சி

Update: 2023-03-25 16:31 GMT

சென்னை தாம்பரம் அருகே பாரில் சைடிஸ் வாங்குவதில் தகராறு ஏற்பட்டு, போதையில் மோதிக்கொண்ட கும்பலை தடுக்க சென்றவரின் தங்க சங்கிலி திருடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பெருங்களத்தூர் அருகே உள்ள மதுபான பாரில் சைடிஸ் வாங்குவதில் தகராறு ஏற்பட்டு மதுபிரியர்கள் மோதிக்கொண்டுள்ளனர். இவர்களின், மோதல் சாலை வரை வந்த நிலையில், குண்டுமேட்டை சென்ற கண்ணன் என்பவர் மோதலை தடுக்க சென்றுள்ளார். அப்போது, கண்ணனை தாக்கிய அந்த கும்பல், அவர் கழுத்தில் இருந்து தங்கச்சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்