சாலையில் இறங்கிய பாகுபலி காட்டு யானை..அச்சத்தில் பொதுமக்கள்

Update: 2023-05-25 05:31 GMT

மேட்டுப்பாளையம் அருகே சாலைப்பகுதியில் உலாவிய பாகுபலி காட்டு யானையால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி காட்டு யானை, பத்திரகாளியம்மன் கோயிலுக்கு செல்லும் முக்கிய சாலையில் உலாவியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். இருப்பினும் சில இளைஞர்கள் ஆபத்தை உணராமல், யானையை வீடியோ எடுத்தவாறே அதன் பின்னால் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்