"அரசுகளை கவிழ்க்க முயற்சி" - கேரளா முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு | Pinarayi Vijayan | Kerala

Update: 2022-11-09 02:29 GMT

"அரசுகளை கவிழ்க்க முயற்சி" - கேரளா முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இஸ்ரோ பணியாளர்கள் சங்கத்தின் பொன்விழா கொண்டாட்டம் தொடங்கியது. இவ்விழாவில் பங்கேற்று பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் , அம்மாநில ஆளுநர் மற்றும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் மீது அத்துமீறல்கள் உள்ளதாகவும், ஆட்சி மற்றும் சட்டப்பேரவை அதிகாரத்தில் அத்துமீறி செயல்படுவதாகவும், குதிரை பேரம் நடக்காத இடங்களில் ஆளுனர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டினார்.

கேரள அரசு கையகப்படுத்த தயாராக இருந்த சில நிறுவனங்களை கையகபடுத்தவிடாமல் மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டு முடக்கி வருவதாகவும் முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்