Dr.சிவந்தி ஆதித்தனார் கல்வி நிறுவனத்தில் கலைத் திருவிழா

Update: 2022-12-01 05:31 GMT

திருச்செந்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்து 25 அரசு பள்ளி மாணவ, மாணவியர், கவின்கலை, இசை, நடனம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், 194 போட்டிகளில் பங்கேற்று, தங்களது தனித்திறமைகளை வெளிபடுத்தினர்.

மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவிற்கு, ஆதித்தனார் கல்வி நிறுவன செயலர் நாராயணராஜன் தலைமை தாங்கினார்.

ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி வாழ்த்துரை வழங்கிய நிலையில், திருச்செந்தூர் நகர்மன்ற துணைத் தலைவர் ஏ.பி ரமேஷ், மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்