உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் முதல் பெண் சோப்தாராக, லலிதா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பெண் நீதிபதிகளுக்கான சோப்தாராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த பட்டதாரியான இவர், இப்பணி பெருமை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில், திலானி என்பவர் கடந்த ஜூன் மாதம் முதல் பெண் சோப்தாராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.