Bus-ல் பயணிக்கும் பயணிகள் எல்லாம் 'சுமை'.. கொந்தளித்த சக பயணியால் பரபரப்பு

Update: 2023-05-17 03:10 GMT

கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை வழியாக செல்லும் தனியார் பேருந்துகள், பரங்கிப்பேட்டைக்கு செல்லாமல் மாற்று வழியில் செல்வதாக புகார்கள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் சிதம்பரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆய்வு செய்த நிலையில், பரங்கிப்பேட்டை வழியாக செல்லும் பேருந்துகளில், பயணிச்சீட்டில் பயணி என குறிப்பிடாமல் சுமை என குறிப்பிடப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பயணி ஒருவர் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்