நாடாளுமன்றத்தில் ஷூட்டிங் நடத்த நடிகை கங்கனா கோரிக்கை

Update: 2022-12-19 05:10 GMT

1975 முதல் 1977 வரை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டதை கருவாக‌க் கொண்டு, நடிகை கங்கனா ரணாவத் 'எமர்ஜென்சி' என்ற பெயரில் படம் எடுத்து வருகிறார்.

அவரே தயாரித்து, இயக்கி வரும் இந்த படத்திற்கு சில முக்கியமான காட்சிகள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் எடுக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக நாடாளுமன்ற வளாகத்திற்குள் படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரி நடாளுமன்ற செயலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

பொதுவாக, நாடாளுமன்ற வளாகத்தில் படப்பிடிப்பு நடத்தவோ, வீடியோ எடுக்கவோ தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

இதனால், நடிகை கங்கனா ரணாவத்தின் கோரிக்கை, நிராகரிக்கப்படும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்