"ஒவ்வொரு 28 மணி நேரத்திற்கும் ஒரு பெண் கொலை" - வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்திய ஈகுவேடர் மக்கள்

Update: 2022-10-03 03:06 GMT

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி ஈகுவேடர் நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவேடரில் ஒவ்வொரு 28 மணி நேரத்திற்கும் ஒரு பெண் கொல்லப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பயனுள்ள அரசியல் கொள்கைகள் இல்லாததாகக் குற்றம் சாட்டி அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்