ரயிலில் ஏறும்போது நிலைதடுமாறி விழுந்த நபர் -உயிர்பிழைத்த நிலையில் வலது கையில் சிதைவு

Update: 2022-10-30 14:17 GMT

புதுச்சேரி ரயில் நிலையத்தில், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ராமர் என்பவர், விழுப்புரம் செல்லும் ரயிலில் ஏற முற்பட்டுள்ளார். அப்போது நிலை தடுமாறி தண்டவாளத்தில் விழுந்த அவர், அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். எனினும் தண்டவாளத்தில் சிக்கியதில் அவரது வலது கை சிதைந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ராமரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்