பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த சோகம் | sivakasi | crackers | crackers factory |

Update: 2022-11-15 09:12 GMT

கவனக்குறைவாக நடந்து சென்ற பெண் தூக்கி வீசப்பட்டு பரிதாப மரணம்.

சிவகாசி அருகே, பட்டாசு தொழிற்சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் தொழிலாளி, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

மேல தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த நயனம்மாள் என்பவர், சாமிநத்தம் கிராமத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். எதிர்பாராத விதமாக, தொழிற்சாலை வளாகத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த நயனம்மாள், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மல்லி போலீசார், சடலத்தை கைப்பற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்