டாஸ்மாக் அருகில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்.. - அதிர்ந்த திருவண்ணாமலை

Update: 2023-07-05 03:17 GMT

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி வியாபாரிகள் மனு அளித்தனர். டவுன் மார்க்கெட் வீதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி ஏற்கனவே இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த டாஸ்மாக் அருகே பிரகாஷ் என்பவர் குடிபோதையில் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். அவரது சடலத்தை போலீசார் மீட்டுச் சென்ற நிலையில், டாஸ்மாக்கை உடனடியாக அகற்ற வேண்டுமென, டி.எஸ்.பி அலுவலகத்தில் வியாபாரிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்